

இது தான் ஜனநாயகமா???
உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு இந்தியா.உண்மைதான்.உலகின் பல நாடுகள் இந்தியாவை மதிக்கின்றன.காரணம் இந்தியா 7 வது பெரிய நாடு என்பதற்கோ அல்லது உலகின் 6 வது இராணுவ வல்லரசு என்பதற்கோ அல்ல மாறாக மக்களாட்சியை 70 ஆண்டுகளை தாண்டியும் கடைபிடிக்கும் நாடு என்ற ஒரு காரணத்தால் மட்டுமே.உலகில் பல நாடுகள் இந்தியாவிற்கு சிவப்புகம்பலம் விரித்து வரவேற்பதற்கு இதுதான் காரணம்.ஆனால்
மக்களிடம் வாக்கு பெற்று நாடாளுமன்றம் செல்லும் வெற்றியாளர்கள் நாடு,மக்கள் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தன்னுடைய முன்னேற்றத்தை மட்டும் குறியாக கொண்டு செயல் படுகிறார்கள்.இவர்களுக்கு ஓட்டு போடும் மக்களின் நிலை ஆண்டிதான்.
இந்த வெற்றியாளர்கள் போய்வர இலவச விமானம்,முதல் வகுப்பு ரயிலில் இலவசம்,பாராளும் மன்றம் செல்ல வாகனம்,பேசுவதற்கு மைக்,உக்கார நாற்காலி,வியர்க்காமல் இருக்க மின்விசிறி இவை அனைத்தும் முற்றிலும் அனாவசியமாக எனக்கு படுகிறது.காரணம் அவர்கள் இலவசமாக பயன்படுத்தும் அனைத்தும் கடைசியாக செல்லும் இடம் காயலாங்கடை?
மீண்டும் புதிதாக பொறுத்த பல கோடி பணம் செலவாகும்.இதுக்கு பணம் மகளின் வரிப்பணம்??சரி இப்படி நடபவர்களுக்கு மக்கள் தரும் தண்டனை மறு தேர்தலில் வெற்றியை தருகிறார்கள் கேவலம் பணத்திற்காக???
பேரறிஞர் அண்ணா ஒரு கருத்தரங்கில் சொன்னார் 'இந்த நாடும் நாடு மக்களும் நாசமாய் போகட்டும் என்று' இந்த நிலை தொடருமானால் அண்ணாவின் இந்த சாபம் கட்டாயம் பழிக்கும் என்பதில் மற்று கருத்து இல்லை.

