WELLCOME TO TAMILANVAALVAAN.BLOGS.

Wednesday, May 12, 2010

தலை வணங்குகிறேன்!


தலை வணங்குகிறேன் பெண்ணே!!!

வெற்று வசனம் பேசி ஊரை ஏமாற்றாமல்!
பழங்கதை பேசி நேரத்தை வீணாக்காமல்!
தொலைகாட்சி சீரியல் பார்த்து அழாமல்!

நாளை நமதே!இந்த நாடும் நமதே!
என்ற எண்ணம் கொண்டு
எல்லையில் நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி நிற்கும் பெண்ணை
உன்னை நான் வணங்குகிறேன்!!!

Wednesday, May 5, 2010

தமிழனை அவமானபடுத்தும் கூகுள்.

தமிழன் உலகத்திற்கே கலாச்சாரத்தை கற்றுகொடுத்தவன்,
கல் தோன்றி,மண் தோன்றா காலத்தில் கணத்த புகழுடன் தோன்றிய குடி தமிழ்குடி,
விருந்தோம்பலில் தமிழன் தலை சிறந்தவன்,

எல்லாம் சரி இன்று தமிழனை உலகம் எப்படி நினைக்கிறது???
சோதனை செய்ய கூகிள் -கு செல்லுங்கள்,பின் கூகுளின் மொழியை தமிழ் மொழிக்கு மாற்றி கொள்ளுங்கள்.
பின் 'a' என்று டைப் செய்து enter செய்யாமல் கீழே வருவதை பாருங்கள்.
கீழே வருவது என்ன??
1,அக்கா நித்யாவுடன் ஒரு அருமையான அனுபவம்!
2,அத்தை கதைகள்!
3,அனிதா அண்ணி!
4,அக்காவின் ஆசை!
5,அண்ணி நான்!
6,அக்கா தம்பி!
7,அண்ணியை!
8,அண்ணி கதைகள்!
9,ஆண்மை விருந்தற்கு!
10,அழகு குறிப்பு!

இவையே

'a' என்று பொருள் படும் 'அ' என்ற தமிழ் வார்த்தையில்
1,அன்பு,
2,அப்பா,
3,அம்மா,
4,அறிவு,
என்று பல நல்ல வார்த்தைகள் இருந்தும் பன்னாட்டு தேடுபொறி நிறுவனமான் கூகுள் மேற்சொன்ன வார்த்தைகளை தமிழில் அதிகம் பயன்படுத்துகிறது.
காரணம்???
பன்னாட்டு நிறுவனங்கள் தமிழனை காமுகனாக நினைகின்றன.

Monday, May 3, 2010

இந்த மாற்றம் நல்லதல்ல!!!



கூட்டுகுடும்பம்!!!
இந்த வார்த்தை இன்று அரிதாகி வருகிறது.
தாத்தா,பாட்டி,சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை,பெரியம்மா,பெரியப்பா,
இதுவே தமிழ்குடும்பம்.

ஆனால் இன்று!!!
அம்மா,அப்பா,அக்கா,தம்பி இது இப்போதைய குடும்ப உறவுகள்.
கூட்டுகுடும்பம் என்ற வார்த்தை இன்று அழிந்து வருகிறது.
இதனால் யாருக்கு என்ன பயன்???
இதனால் அதிகம் பாதிக்கபடுவது குழந்தைகளும்,பெரியவர்களும் தான்.
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு அறிவு,வீரம் போன்றவை தாத்தா,பாட்டிஇனர் கதைகள் மூலம் புகட்டப்படும்,
ஆனால் இன்று???
எந்த குழந்தைகள் தாத்தா,பாட்டி,கதைகளை கேட்கமுடிகிறது,
வயசான காலத்தில் பேரபிள்ளைகள் நம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்பும் முதியவர்களுக்கு கடைசியாக அடைக்கலம் தருவது முதியோர் காப்பகங்கல்தான்.இந்த நிலைதான் அனாதை காப்பகங்களும்,முதியோர் காப்பகங்களும் உருவாக காரணமாகிறது.
பெரியவர்களும் குழந்தைகள் தான் என்பதை நம்மில் பலர் உணர மறுக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு.இன்றைய இளைஞன் நாளைய முதியவன் என்பதை நாம் மாறாக கூடாது.மறக்கவும் முடியாது.

முதியோர்களை காப்போம்!!! முதியோர் இல்லத்தை அழிப்போம்!!!