“எங்கெங்கு காணினும் போலிகளடா!” என்று சொல்லும் அளவுக்கு போலிகள் நிறைந்துள்ள காலமிது. போலி மருத்துவர்கள் கைது, போலி மருந்துகள் பறிமுதல் என்றெல்லாம் செய்திகள் வரும்போது நம் இதயத்துடிப்பு எகிறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
போலி எது? அசல் எது? என்று அவ்வளவு எளிதாகப் பிரித்தறிய இயன்றிடாதபடி நடமாடும் இந்த ”பசுத் தோல் போர்த்திய பன்றிகளிடமிருந்து” தப்பிக்க வழி தான் என்ன? என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் நச்சென்று நான்கு இணைய தளங்கள் கிடைத்தன. அவற்றைப் பகிரும் முகம் தான் இப் பதிவு… நோய், மருந்து, மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!
முதலாவதாக Drugs.Com இணைய தளம் பற்றி,
நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த மருந்து விற்பன்னர்கள் சேர்ந்த்து நடத்தும் Drugsite Trust ஆல் நடத்தப்படும் இணைய தளம். 107,000 மருந்துகள் A to Z வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Food and Drug Administration (FDA) புதிதாக அங்கீகரிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. இத்தளத்தினை எவ்வாறு உபயோகிப்பது?
நம்ம ரஜினி சிவாஜி படத்துல வெள்ளையா மாற ஒரு கிரீம் போடுவாறே அது மாதிரி “ஆறே வாரங்களில் சிகப்பழகு பெற” எதாவது கிரீம் போடுறீங்களா? அந்த மருந்து அட்டையில் உள்ள அதன் வேதிப் பெயரைக் கண்டறியுங்கள்… உதாரணத்திற்கு, Hydroquinone. இதனை இத் தளத்தில் உள்ளீடு செய்து தேடு என்று கட்டளை பிறப்பித்தால்,
இந்த மருந்து நம் உடலில் செய்யும் மகத்துவங்கள் என்ன?
மருந்தை உபயோகிக்கும் முன் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்?
எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?
அளவுக்கு அதிகமானால் (Over Dose) என்னென்ன பிரச்சினைகள் வரும்?
என்று எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறது.
இதன் மூலம் நமக்கு மருந்தெழுதிக் கொடுத்த Doctor, அந்த மருந்தை எடுத்துக் கொடுத்த Pharmacist ஆகியோர் (போலிகளாக இருக்கும் பட்சத்தில்) தவறுகளைத் தவிர்க்கலாம். உண்மையில் அந்த மருந்து நமக்குத் தேவை தானா? இல்லை காசுக்கு வந்த கேடா? என்றும் அறியலாம்.
மருந்துகளில் இருக்கும் USP, IP, BP என்ற எழுத்துக்களை பார்த்திருக்கிறீர்களா? அப்படின்னா,
USP: United States Pharmacopeia
IP: Indian Pharmacopeia
BP: British Pharmacopeia
என்று பொருள் படும் . எந்த நாட்டு மருத்துவ விதிகளின் படி உருவாக்கப்பட்ட கலவை இந்த மருந்து என்பதனைக் குறிக்கும்.
Wednesday, September 21, 2011
Friday, September 16, 2011
* பணமும், வசதி வாய்ப்புகளும் வந்து போகக்கூடியவை.
மனித சமூகம் செல்வத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறது.
வாழ்க்கை பொருளுடையதாக இருக்கவேண்டுமானால், பொருள் தேடுவதோடு அருளையும் தேட வேண்டும்.
* சுயநலமற்ற சேவை மட்டுமே மனசாந்தியைத் தரவல்லது.
நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை சேவை வெளிக்கொணர்ந்து விடும் ஆற்றல் கொண்டது.
* தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்குமானால்,
முதலில் தொண்டனாக சேவை செய்யும் அனுபவத்தைப் பெறவேண்டும்.
* எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக எண்ணுகிறானோ
அவனே வாழ்வின் உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* கடந்த காலம் திரும்புவதில்லை. வருங்காலம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே அறிவாளியின் செயல்.
* பிறக்கும்போது ஆபரணங்களுடன் பிறப்பதில்லை. ஆனால்,
முற்பிறவியில் செய்த செயல்களின் வினைப்பயனை அணிந்து கொண்டு வருகிறோம். யாராக இருந்தாலும் இதில் தப்ப முடியாது.
மனித சமூகம் செல்வத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறது.
வாழ்க்கை பொருளுடையதாக இருக்கவேண்டுமானால், பொருள் தேடுவதோடு அருளையும் தேட வேண்டும்.
* சுயநலமற்ற சேவை மட்டுமே மனசாந்தியைத் தரவல்லது.
நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை சேவை வெளிக்கொணர்ந்து விடும் ஆற்றல் கொண்டது.
* தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்குமானால்,
முதலில் தொண்டனாக சேவை செய்யும் அனுபவத்தைப் பெறவேண்டும்.
* எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக எண்ணுகிறானோ
அவனே வாழ்வின் உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* கடந்த காலம் திரும்புவதில்லை. வருங்காலம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே அறிவாளியின் செயல்.
* பிறக்கும்போது ஆபரணங்களுடன் பிறப்பதில்லை. ஆனால்,
முற்பிறவியில் செய்த செயல்களின் வினைப்பயனை அணிந்து கொண்டு வருகிறோம். யாராக இருந்தாலும் இதில் தப்ப முடியாது.
Monday, September 12, 2011
நீ...
நீ...
சுதந்திரவிழா கொண்டாட்டம்!
பாதுகாப்பு படை சூழ,
பாரததலைவர்கள் கொடியேற்றம்.
சுதந்திர நாட்டில் சுதந்திரமில்லை
நம் தேசிய கொடுயேற்ற.
ஏனிந்த நிலை? எதற்கிந்த பாதுகாப்பு?
உன் பாதுகாப்புக்காக
பாதுகாவலன் சுதந்திரம் பறிபோகிறதே.
அவர்களுக்கு சுதந்திரமில்லையா?
அதுமட்டுமா இங்கே.
கட்சி பொதுகூட்டமொன்று;
கட்டுக்கடங்கா மக்கள்வெள்ளம்;
கட்டுப்படுத்த காவலர் வெள்ளம்;
யாரந்த தலைவர்?
நீதியின் மறுபிறவியா?
ஏழையின் பாதுகாவலனா?
அப்படியே இருப்பினும்
அவனும் மனிதன்தானே;
அவன் தன்கடமையின்
சிறிதை தானே செய்தான் - பின்
ஏனிந்த ஆடம்பரம்?
எத்ற்கிந்த செலவுகள்?
அதனால் உனது நிலைதான் என்ன?
அதில் உன் பங்குதான் என்ன?
கட்சிக்காக கொடிபிடிக்கிறாய்,
போஸ்டரும் பேனரும் ஒட்டுகிறாய்,
கடவுளாகவும் அவரை வணங்குகிறாய்,
கூட்டம் சேர்க்கிறாய்,
ஆர்ப்பாட்டம் செய்கிறாய்,
ஆனால் நீ ஒன்றை சிந்தித்துபார்!
அன்றைய வருமானம் போயிற்று!
நாட்டின் வருமானம் போயிற்று!
நாட்டின் வளர்ச்சி போயிற்று!
நம் வரிபணம் இம்மாநாட்டினால்
மண்ணோடு மண்ணாய் போயிற்று!
மக்கள் சந்தோஷம் போயிற்று!
ஒலிஒளியால் அவ்வூர் மக்களின்
அமைதி போயிற்று!
கல்விகுழந்தைகளின் கல்வியும்
சிறு குழந்தையின் உறக்கமும்
அவ்வொலிஒளியால் காற்றாய் போயிற்று!
அதுமட்டுமா நடக்கிறது அங்கு,
மக்கள் நெரிசலால் அங்கு
சாலை திணருகிறது.
அத்தலைவரின் வருக்கைக்காக
சாலையோர தோரணங்களும்,
வானவேடிக்கையும், பட்டாசும் வேறு,
ஒன்றை சிந்தித்துபார்!
சாலையில் நீ வெடிக்கின்ற
வெடியின் சிறு தீப்பொறி
தீக்கடலாய் மாறிடும்
அருகிலுள்ள வாகனத்தில் பட்டால்,
அப்போது நீ மட்டுமல்ல
அவ்வூரே அழிந்திடும்?!!....
இதற்காக பட்டாசு வெடிக்காதே
என கூறவில்லை - வெடி,
பொது இடம் தவிர்த்து வேறு
எங்காவது சென்று வெடி.
வீணான பொருள், அமைதி
உயிர் இழப்பாவது குறையும்.
இதை பற்றி என்றாவது
நீ நேரம் செலவிட்டு சிந்தித்துள்ளாயா?
இனிமேலாவது சிந்தனைசெய்,
அதற்குதான் மூளையும் உடலும்!
அதற்கு பிறகாவது
வீனான செலவை குறை,
நாட்டின் வளர்ச்சிக்கு உழை,
அவசியம் சட்ட அறிவை பெற்றிடு,
தூய்மையான உலகை படைத்திடு
சுதந்திரவிழா கொண்டாட்டம்!
பாதுகாப்பு படை சூழ,
பாரததலைவர்கள் கொடியேற்றம்.
சுதந்திர நாட்டில் சுதந்திரமில்லை
நம் தேசிய கொடுயேற்ற.
ஏனிந்த நிலை? எதற்கிந்த பாதுகாப்பு?
உன் பாதுகாப்புக்காக
பாதுகாவலன் சுதந்திரம் பறிபோகிறதே.
அவர்களுக்கு சுதந்திரமில்லையா?
அதுமட்டுமா இங்கே.
கட்சி பொதுகூட்டமொன்று;
கட்டுக்கடங்கா மக்கள்வெள்ளம்;
கட்டுப்படுத்த காவலர் வெள்ளம்;
யாரந்த தலைவர்?
நீதியின் மறுபிறவியா?
ஏழையின் பாதுகாவலனா?
அப்படியே இருப்பினும்
அவனும் மனிதன்தானே;
அவன் தன்கடமையின்
சிறிதை தானே செய்தான் - பின்
ஏனிந்த ஆடம்பரம்?
எத்ற்கிந்த செலவுகள்?
அதனால் உனது நிலைதான் என்ன?
அதில் உன் பங்குதான் என்ன?
கட்சிக்காக கொடிபிடிக்கிறாய்,
போஸ்டரும் பேனரும் ஒட்டுகிறாய்,
கடவுளாகவும் அவரை வணங்குகிறாய்,
கூட்டம் சேர்க்கிறாய்,
ஆர்ப்பாட்டம் செய்கிறாய்,
ஆனால் நீ ஒன்றை சிந்தித்துபார்!
அன்றைய வருமானம் போயிற்று!
நாட்டின் வருமானம் போயிற்று!
நாட்டின் வளர்ச்சி போயிற்று!
நம் வரிபணம் இம்மாநாட்டினால்
மண்ணோடு மண்ணாய் போயிற்று!
மக்கள் சந்தோஷம் போயிற்று!
ஒலிஒளியால் அவ்வூர் மக்களின்
அமைதி போயிற்று!
கல்விகுழந்தைகளின் கல்வியும்
சிறு குழந்தையின் உறக்கமும்
அவ்வொலிஒளியால் காற்றாய் போயிற்று!
அதுமட்டுமா நடக்கிறது அங்கு,
மக்கள் நெரிசலால் அங்கு
சாலை திணருகிறது.
அத்தலைவரின் வருக்கைக்காக
சாலையோர தோரணங்களும்,
வானவேடிக்கையும், பட்டாசும் வேறு,
ஒன்றை சிந்தித்துபார்!
சாலையில் நீ வெடிக்கின்ற
வெடியின் சிறு தீப்பொறி
தீக்கடலாய் மாறிடும்
அருகிலுள்ள வாகனத்தில் பட்டால்,
அப்போது நீ மட்டுமல்ல
அவ்வூரே அழிந்திடும்?!!....
இதற்காக பட்டாசு வெடிக்காதே
என கூறவில்லை - வெடி,
பொது இடம் தவிர்த்து வேறு
எங்காவது சென்று வெடி.
வீணான பொருள், அமைதி
உயிர் இழப்பாவது குறையும்.
இதை பற்றி என்றாவது
நீ நேரம் செலவிட்டு சிந்தித்துள்ளாயா?
இனிமேலாவது சிந்தனைசெய்,
அதற்குதான் மூளையும் உடலும்!
அதற்கு பிறகாவது
வீனான செலவை குறை,
நாட்டின் வளர்ச்சிக்கு உழை,
அவசியம் சட்ட அறிவை பெற்றிடு,
தூய்மையான உலகை படைத்திடு
Subscribe to:
Posts (Atom)

