WELLCOME TO TAMILANVAALVAAN.BLOGS.

Friday, April 16, 2010

இது முட்டாள் தனம்!!!

"நக்சலைட்டுகளை ஒடுக்க இரண்டு வாரத்தில் இறுதி முடிவு,ப.சிதம்பரம் மாநிலங்களில் அறிக்கை"
இது மிகவும் காலதாமதமான முடிவு.எந்த ஒரு கலவரமும் அதன் ஆரம்பத்திலேயே கில்லி எறியப்பட வேண்டும்.இந்திய நாட்டின் ஒரு மாநிலம் இதனால் பாதிக்கப்பட்டு மற்ற மாநிலங்களுக்கும் நக்சல்கள் பரவிவிட்டார்கள்,
ஆரம்பத்தில் சும்மா இருந்துவிட்டு இப்போது குத்துதே,குடையுதே என்றால் எப்படி,எந்த ஒரு தீவிரவாத குழுவும் எளிதில் பெரிய அளவில் வளர்வதில்லை.
இன்று பல கோடி ரூபாய்கள் அவர்களிடம் போர் கருவிகள் வாங்கும் அளவிற்கு வுள்ளன இவ்வளவு பணம் அவர்களுக்கு எப்படி வந்தது,வரும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்தார்கள்?என்று பல கேள்விக்கு விடை தேடாமல் அவர்களை அழிப்போம் என்று சொல்வது முட்டாள்தனம்.

அறிவு வேண்டும் நம்மவருக்கு!!!


அறிவு வேண்டும் நம்மவருக்கு!!!

"பிரேசில் நாட்டில் "பிரிக்" மாநாடு இந்திய பிரதமர் பிரேசில் பயணம் வுடன் தன் மனைவியும் அழைத்துசெல்கிறார்"
பிரேசிலில் பிரதமற்கும் அவரது மனைவிக்கும் சிவப்புகம்பள வரவேற்பு.
மாநாட்டில் கலந்து கொள்பவர் பிரதமர் மட்டும் தான், அப்படியானால் அவரது மனைவிக்கு அங்கு என்ன வேளை?அவர் பிரேசிலை சுற்றி பார்கிறராம்!
அங்கு அவர் செல்லும் இடமெல்லாம் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்வர்கள்,செல்லும் இடமெல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பு அதுவும் இந்திய அரசின் பணத்தில்! நம் நாட்டில் பலர் உண்ண வுணவின்றி இருக்கும் போது இந்த வூர் சுற்றுதல் தேவையா?ஒவ்வெரு முறை பிரதமர் மாநாடு செல்லும் போதும் அவரது பாதுகாப்பிற்காக பல கோடி ரூபாய்கள் செலவிடப்படும் இப்போது பிரதமர் தன் மனைவியுடன் செல்வதால் அந்த செலவுடன் இன்னொரு மடங்கு தண்டசெலவு வேறு.


"பிரதமர் ஆனாலும் அறிவு வேண்டும்"

முடிவல்ல ஆரம்பம்!!!


இந்தியாவின் GSLV-D3 தோல்வி!!!,
வுலகில் ராகேட் செலுத்துவதில் 3 இடத்தில வுள்ள நாடு இந்தியா.
இந்தியா சொந்தமாக தயாரித்த கேரயோஜெனிக் பொருத்தப்பட்ட ராக்கெட் அது.
இதுவரை இந்தியா இரசிய கேரயோஜெனிக் வைத்துதான் ராக்கெட் செலுத்தியது.தானே சொந்தமாக கேரயோஜெனிக் என்ஜின் தயாரிக்க வேண்டும் என்று எண்ணியதே பாதி கிணறு தான்றியதற்கு சமம் பாதி கிணறு தான்றியவனுக்கு மீதி கிணறு தான்றுவது சிரமமல்ல.
எனவே இது

முடிவல்ல ஆரம்பம்!!!

தேவை கவனம்!!!

ராமநாதபுரம் மாவட்ட காவேரி குடிநீர் திட்டத்திற்கு 500 கோடி,
கிராம வுரட்சிக்கு மொத்தமாக 200 கோடி,
கிராம ஏழை பெண்களுக்கு கல்வி முன்னேற்றம் அடைய 900 கோடி,
வீடு இல்லாத குடும்பத்திற்கு இலவச வீடு கட 1000 கோடி,
நியாய விலை கடையில் 1 ரூபாய்க்கு அரிசி,

இது போன்ற செய்திகள் சட்டமன்றத்தில் இருந்து வெளிவரும்போது கேட்கவும் படிக்கவும் சந்தோசமாக இருக்கும்.அதோடு நிறுத்தி அதை மறந்து விட வேண்டும்,
"உலகில் நம் ஆட்சியாளர்கள் தான் சிறந்த திட்டங்களை எடுக்கிறார்கள்?
பிறகு ஏன் இன்னும் நம் நாடு பின்தங்கி வுள்ளது?"
நல்ல திட்டங்களை எடுக்கும் நம் அறிவாளிகள் அதை செயல் படுத்துவதில் தான் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.எந்த ஒரு திட்டமும் அதை வகுப்பதை விட முறைபடுத்தும் முறையில் தான் நல்ல திட்டம் என்ற புகழபடும்.ஆனால் நம் ஆட்சியாளர்கள் சட்டம் தீட்டும் போது இருக்கும் அளவிற்கு ஆர்வம் நடைமுறை படுத்தும் போது இல்லை.அதனால் தான் இன்னும் நம் நாடு வளரும் நாடாக வுள்ளது.
எனவே திட்டங்களை எடுப்பதை விட அதை நடைமுறை படுத்துவதில் அதிக கவனம் தேவை.

Wednesday, April 14, 2010

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!
























சுதந்திர இந்தியா...,

சும்மா கிடைக்கவில்லை இந்த பெயர்.பலர் தன் இன் உயிரை துச்சமாக நினைத்து பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இது.இன்று நம்மில் பலருக்கு கிரிக்கெட் விளையாடும் போது மட்டும் தான் தான் இந்தியன் என்பது நினைவுக்கு வருகிறது.நமக்காக ராணுவ வீரர்கள் பனி என்றும் வெயில் என்றும் பாராமல் பாடுபடும் போது நாம் கொடி நாளுக்கு கூட பணம் தருவதில்லை.அதை விட கொடுமை நம்மில் பலர் சுதந்திர,குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதே கிடையாது.
கல்லூரியில் புகை பிடிக்க தடை விதித்தால்
"என்ன சுதந்திரம் இது ஒரு தம் அடிக்ககுட சுதந்திரம் இல்லையா நாட்ல, எதற்கு சுதந்திரம் வாங்கினார்களோ பேசாம இங்கிலிஷ்கரானே இருந்திருக்கலாம்"என்று நக்கல் அடிக்கிறோம்.சுதந்திரம் என்பது வுன்னை,வுன் சராசரி வுரிமையை பாதுகாக்கவும்,வுன்னை அடுத்து வரும் தலைமுறையை பாதுகாக்கவும்,நாட்டை பாதுகாக்கவும் தானே தவிர தம் அடிக்கவும், தண்ணி அடிக்கவும் அல்ல.
எவனோ ஒரு தறுதலை அவனுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக நம் நாட்டு கொடியை எறிகிறான் எதுத்து கேக்க வக்கில்லை.கேட்டால் வெளிஉறவு கொள்கை என்று கூறுவது.நம் தேசிய கொடியை எரிப்பது நம்மை எரிபதற்கு சமம்,நம்மையே எரிக்க துணிந்தவனிடம் வெளிஉறவு கொள்கை எதற்கு.இன்னொரு கிழவி நம் தேசிய கொடி மீதே கால்வைத்து அமர்ந்து இருகிறாள் என்ன தைரியம் அந்த கிழட்டு நாயிக்கு.இதை பேப்பரில் படித்தால் அதிக பட்சம் போனால் பத்துநிமிஷம் அவர்களை திட்டுவோம் பிறகு நம் வழக்கமான பணிக்கு சென்று விடுவோம் இது தான் நம் தேச உஎரை???

Tuesday, April 13, 2010

நெஞ்சம் பொறுப்பதிலை!!!



வீதிஓரம் சென்ற சிறுவன் கவலையோடு பார்த்தான் பள்ளி சென்ற சிறுவர்களை தன் அம்மாவிடம் சென்று தன் கவலையை கூறினான்,வியாபாரத்திற்கு சென்ற அவன் தந்தை கவலையோடு தன் துணைவிஇடம் கூறினான் "இன்று வியாபாரம் நன்று நடக்கவில்லை வரும் வழியில் ஜோசியரை பார்த்தேன் நமக்கு யதோ தோஷம் பிடித்திருக்காம் வடபழனி முருகன் கோவிலில் காணிக்கை கொடுத்தால் யல்லாம் சரியாகிடுமம்" என்று ஜோசியர் கூறினார் என்று அவர் சொல்ல இருவரும் இருவரும் சேர்ந்து 10000 ரூபாய் கடன் வாங்கி தோஷம் களித்தனர்.இதனால் அவர்கள் பெரிதாக என்ன கிடைத்துவிடபோகிறது.அந்த 10000 ரூபாயை அவன் தொழிலில் முதலிடு செய்தல் அவன் முதலாளி ஆகி இருப்பான்.எதோ ஒரு கல் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையை அவன் தன் மீது வைத்திருந்தால் அவன் வளர்ந்திருப்பான்.நம் முன்னோர்கள் செய்த மிகபெரிய தவறு கடவுளை வுருவம் கொடோதடு.அதை விட பெரிய தவறு தன்னை விட அவன் மீது அதிக நம்பிக்கை வைத்தது.கோவில் இல்லாத வூரில் குடி போக கூடாது என்று பழமொழி சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.அதனால் தான் இன்று எல்லா வுர்களிலும் கோவில்கள் கோபுரங்களாகவும்,மாளிகையாகவும் வளர்ந்துள்ளன.அதை விட கொடுமை நம் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் பாலின்று இறக்கும் போது நம் கோவில்களில் வெறும் கல் சிலைக்கு பால் அபிஷேகம் நடத்தபடுகிறது.நம் வூரில் பலர் நல்ல வுணவின்றி இருக்கும் போது கோவில்களில் கல்லுக்கு வெய்னையகவும் நெய்யாகவும் அபிஷேகம் செய்யபடுகிறது.இதை விட கொடுமை பல கோடிகள் கோவிலில் காணிக்கை தரபடுகிறது.இதை தவிர தங்கம், வைரம்,வெள்ளி, என பல காணிக்கைகள் தரபடுகிறது.இல்லாத ஒன்றுக்கு இங்கே நடக்கும் கொடுமையை என்னவென்று கூறுவது.இந்த பணத்தில் பலருக்கு கல்வி,வுணவு தந்திருக்கலாம்.

என் நண்பர்களே கோவிலுக்கு செல்லுங்கள் தவறில்லை.ஆனால் ஒரு பைசா கூட காணிக்கை போடதிர்கள்.


கடவுளை மாற!!! மனிதனை நினை!!!