இது மிகவும் காலதாமதமான முடிவு.எந்த ஒரு கலவரமும் அதன் ஆரம்பத்திலேயே கில்லி எறியப்பட வேண்டும்.இந்திய நாட்டின் ஒரு மாநிலம் இதனால் பாதிக்கப்பட்டு மற்ற மாநிலங்களுக்கும் நக்சல்கள் பரவிவிட்டார்கள்,
ஆரம்பத்தில் சும்மா இருந்துவிட்டு இப்போது குத்துதே,குடையுதே என்றால் எப்படி,எந்த ஒரு தீவிரவாத குழுவும் எளிதில் பெரிய அளவில் வளர்வதில்லை.
இன்று பல கோடி ரூபாய்கள் அவர்களிடம் போர் கருவிகள் வாங்கும் அளவிற்கு வுள்ளன இவ்வளவு பணம் அவர்களுக்கு எப்படி வந்தது,வரும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்தார்கள்?என்று பல கேள்விக்கு விடை தேடாமல் அவர்களை அழிப்போம் என்று சொல்வது முட்டாள்தனம்.











