WELLCOME TO TAMILANVAALVAAN.BLOGS.

Friday, April 16, 2010

தேவை கவனம்!!!

ராமநாதபுரம் மாவட்ட காவேரி குடிநீர் திட்டத்திற்கு 500 கோடி,
கிராம வுரட்சிக்கு மொத்தமாக 200 கோடி,
கிராம ஏழை பெண்களுக்கு கல்வி முன்னேற்றம் அடைய 900 கோடி,
வீடு இல்லாத குடும்பத்திற்கு இலவச வீடு கட 1000 கோடி,
நியாய விலை கடையில் 1 ரூபாய்க்கு அரிசி,

இது போன்ற செய்திகள் சட்டமன்றத்தில் இருந்து வெளிவரும்போது கேட்கவும் படிக்கவும் சந்தோசமாக இருக்கும்.அதோடு நிறுத்தி அதை மறந்து விட வேண்டும்,
"உலகில் நம் ஆட்சியாளர்கள் தான் சிறந்த திட்டங்களை எடுக்கிறார்கள்?
பிறகு ஏன் இன்னும் நம் நாடு பின்தங்கி வுள்ளது?"
நல்ல திட்டங்களை எடுக்கும் நம் அறிவாளிகள் அதை செயல் படுத்துவதில் தான் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.எந்த ஒரு திட்டமும் அதை வகுப்பதை விட முறைபடுத்தும் முறையில் தான் நல்ல திட்டம் என்ற புகழபடும்.ஆனால் நம் ஆட்சியாளர்கள் சட்டம் தீட்டும் போது இருக்கும் அளவிற்கு ஆர்வம் நடைமுறை படுத்தும் போது இல்லை.அதனால் தான் இன்னும் நம் நாடு வளரும் நாடாக வுள்ளது.
எனவே திட்டங்களை எடுப்பதை விட அதை நடைமுறை படுத்துவதில் அதிக கவனம் தேவை.

No comments:

Post a Comment