WELLCOME TO TAMILANVAALVAAN.BLOGS.

Monday, September 6, 2010

சிந்தியுங்கள் தோழர்களே!!!

இந்தியா ஒழிக!!! இந்திய அரசு ஒழிக!!!

நான் சமீபத்தில் கடந்த ஆண்டு நடந்த வைகோ மற்றும் சீமான் அவர்களின் மாநாடு மற்றும் கட்சி கூடங்களில் நடந்த சொற்பொழிவின் வீடியோ காட்சிகளை பார்த்தேன்.பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.நீங்கள் மேலே கண்ட வாசகம் சீமான் அவர்களின் திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம் ஈழத்திற்கு ஆதரவாக நடத்திய மாநாடில் மாநாடுக்கு வந்தவர்கள் சிலர் பேசியது.தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ள படுவதாகவும் அவர்களின் பாதுகாப்பிற்கு இந்திய அரசு எந்த மதிப்பும் அளிக்க வில்லை என்றும் சீமான் பேசினார்.இந்திய மீனவர்கள் கட்ச தீவு வரை மீன் பிடிக்க இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது என்று இந்திய-இலங்கை ஒபந்தம் கூறியது.ஆனால் இன்று அந்து மீறப்பட்டுள்ளது.அதோடு மட்டும் இன்றி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதலும் நடத்துகிறது.இது மிக பெரிய தவறு.இதில் இந்தியாவின் தவறு ஒன்று இல்லை.இது ஆட்சியில் இருப்பவனின் தவறு அவனை தட்டி கேட்காமல்,ஓட்டு அதிகாரத்தை முறையாகபயன்படுத்தாமல்,இந்தியா ஒழிக!!! இந்திய அரசு ஒழிக!!! என்று குரல் கொடுப்பது மகா முட்டாள் தனம்!!!
இது
ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ம தி மு க தலைவர் வைகோ அவர்களின் பேச்சை கேட்டபோது இன்னொரு அதிர்ச்சி.2009 ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சியில் நடந்தது.அதில் வைகோ அவர்கள் இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள்,ராணுவ பயிற்சிகள் தருவதாகவும் கூறினார்.இந்த நிலை நீடித்தால் இன்னும் 10-15 வருடங்களில் இந்திய வரைபடத்தில் தமிழ் நாடு என்னும் ஒரு மாநிலம் இருக்காது,காரணம் தமிழ் நாடு தனி நாடாகிவிடும் என்று பேசினர்.அவர் பேசி முடித்ததும் பெரிய
கைதட்டுகள்.நான் வீடியோவில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன்.காரணம் இந்த வைகோ தான் ஒருசில வருடங்களுக்கு முன்பு பெரியார் தீவு திடலில் நடந்த மாநாடு ஒன்றில் இந்திய அரசுக்கு ஆதரவாக பேசினார்.அவர் அப்போது இந்திய அரசுக்கு ஆதரவாக பேச காரணம் திமுக-காங்கரஸ் உடனான கூட்டணி.இன்று இந்திய அரசை எதிர்க்க காரணம் திமுக-காங்கிரஸ் கு எதிரான கூட்டணி.இப்படி கூட்டணி மாற மாற இவர்களின் வார்த்தைகளும் மாறுகின்றன.இப்படி வார்த்தைகளை மாற்றி மாற்றி பேசுபவர்கள் ஈழத்தை காக்கிறாராம்.இதை விட கொடுமை தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் மிகபெரிய பிரச்சனை இப்படி பொதுவான பிரச்சினை இவர்களின் அரசியல் தேவைகாக பந்தாடபடுகிறது.நாமும் வெக்கம் இல்லாமல் கைதட்டி சிரிக்கிறோம்.
பேரறிஞர் அண்ணா சொல்லுவார் மாநாட்டில் மேடைக்கு கீழே இருப்பவன் கை தட்டுவதை விட்டு விட்டு மேடையில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டால் மேடையில் யாரும் பேச தயங்குவார்கள்.கீழே இருப்பவன் வெறும் கை மட்டும் தட்டும் வரை மேடையில் இருப்பவன் என்ன வேண்டுமானாலும் பேசுவான்.நாம் இன்னும் கை மட்டும் தட்டி கொண்டு இருப்பதால் தான் மனிதாபிமான அடிப்படையான ஒரு பிரச்சனைக்காக சம்மந்தமே இல்லாமல் இன உணர்வை எழுப்புகிறார்கள்.ஈழத்தில் கொள்ளபடுவது தமிழன் அல்ல மனிதன்.இங்கே இன உணர்வு கூடாது மனித உணர்வே வேண்டும்.இதில் தமிழகத்தை விட இந்தியாவே அக்கறை காட்ட வேண்டும்.இதை நாம் இந்திய மக்களுக்கு உணர்த்த வேண்டும்.உணர மாறுபவர்களை மாற்ற வேண்டும் அதை விட்டு விட்டு தமிழ் நாட்டை தனி நாடகுவோம் என்பதும் அரசியல் தலைவர்களை,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை தரக்குறைவாக பேசுவதும் நாகரிகம் அற்றது.நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட இந்த ஒரு நல்ல தலைவனும் மக்களின் உணர்வுகளை தூண்டி விட என்ன மாட்டான்.அப்படி துண்டி விட எண்ணுபவன் நல்ல தலைவனும் அல்ல.இனிமேலாவது யார் பேசினாலும் கைதட்டாமல் அவர் என பேசுகிறார் என்று சற்று காது கொடுத்து சிந்தியுங்கள் தோழர்களே!!!











No comments:

Post a Comment